பதிவு செய்த நாள்
16 செப்2014
00:36
புதுடில்லி: இந்தியாவின் தாவர எண்ணெய் இறக்குமதி, நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்தில், 13.33 லட்சம் டன்னை எட்டியுள்ளது. இது, கடந்த 20 ஆண்டுகளில், காணப்படாத அதிகபட்ச அளவாகும் என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்.இ.ஏ.,) தெரிவித்துள்ளது.மலேசியாஇனிவரும் மாதங்களிலும், தாவர எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.பாமாயில் உற்பத்தியில், முதல் இரண்டு இடங்களில் உள்ள, இந்தோனேஷியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகள், தங்களின் கையிருப்பை குறைக்கும் வகையில், குறைந்த விலையில், அதிகளவில் தாவர எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.
இது, உள்நாட்டு தாவர எண்ணெய் விலையில், தாக்கத்தை ஏற்படுத்தும் என, எஸ்.இ.ஏ., தெரிவித்துள்ளது.எனவே, உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் விவசாயிகளின் நலனை பாதுகாக்க, குறைந்த விலையில், இறக்குமதி செய்யப்படும் பாமாயிலை கட்டுப்படுத்தும் வகையில், கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என, எஸ்.இ.ஏ., மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.சென்ற 2013ம் ஆண்டு ஜனவரியில், நாட்டின் தாவர எண்ணெய் இறக்குமதி, 11.60 லட்சமாக அதிகரித்து காணப்பட்டது. அதன்பின், சென்ற ஆகஸ்டில் தான், தாவர எண்ணெய் இறக்குமதி இந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. சென்ற ஆகஸ்ட்டில், தாவர எண்ணெய் இறக்குமதி, 76 சதவீதம் அதிகரித்து, 13.33 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
இது, கடந்தாண்டு ஆகஸ்டில், 7.57 லட்சம் டன்னாக இருந்தது.சூரியகாந்தி எண்ணெய்ஒட்டு மொத்த தாவர எண்ணெய் இறக்குமதியில், பாமாயிலின் பங்களிப்பு, 8,05,131 டன்னாகவும், சோயா எண்ணெய் பங்களிப்பு, 3,50,373 டன்னாகவும் உள்ளது.இவை தவிர, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி, 1,40,349 டன்னாகவும் உள்ளது. அதேசமயம், சமையல் சாராத எண்ணெய் வகைகள் இறக்குமதி, 12,135 டன் என்ற அளவிலேயே காணப்படுகிறது.நடப்பு 2013–14ம் சந்தைப்படுத்தும் பருவத்தின், நவம்பர் முதல் ஆகஸ்ட் வரையிலான பத்து மாத காலத்தில், தாவர எண்ணெய் இறக்குமதி, 95.25 லட்சம் டன்னாக எகிறியுள்ளது. இது, கடந்த பருவத்தின் இதே காலத்தில், 87.92 லட்சம் டன்னாக இருந்தது.-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|