பதிவு செய்த நாள்
19 செப்2014
04:04
புதுடில்லி: உலக பெரும் கோடீஸ்வரர்கள் முதல், 10௦ நாடுகளின் பட்டியலில், இந்தியா தொடர்ந்து ஆறாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.இதன்படி, இந்தியாவில் உள்ள பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 100 ஆக உள்ளது. இவர்களிடம் உள்ள நிகர சொத்து மதிப்பு, 10.50 லட்சம் கோடி ரூபாயாகும் (17,500 கோடி டாலர்) என, வெல்த் – எக்ஸ் மற்றும் யு.பி.எஸ்., கோடீஸ்வரர்கள் கணக்கெடுப்பில் (2014) தெரிவிக்கப்பட்டு உள்ளது.தனி நபரின் நிகர சொத்து மதிப்பு 100 கோடி டாலர் அல்லது அதனை தாண்டும்போது அவர் மெகா கோடீஸ்வரர் ஆகிறார்.
உலகின் மொத்த சொத்தில், ௪ சதவீதத்தை மெகா கோடீஸ்வரர்கள் நிர்வகித்து வருகின்றனர்.கடந்த 2013ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, நடப்பாண்டில், 103லிருந்து, 100 ஆக குறைந்துள்ளது. இருப்பினும், முதல் 10 நாடுகளில், ஆறாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டு உள்ளது. இதில் சுவாரசியமாக, சுவிட்சர்லாந்து, ஹாங்காங் மற்றும் பிரான்ஸ் நாடுகளை காட்டிலும், இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.இப்பட்டியலில், 571 பெரும் கோடீஸ்வரர்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, சீனா (190), இங்கிலாந்து (130) ஆகிய நாடுகள் உள்ளன. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, உலக மெகா கோடீஸ்வரர்களின் மொத்த எண்ணிக்கை, நடப்பாண்டில், 7 சதவீதம் (155 பேர்) அதிகரித்து, 2,325 ஆக உயர்ந்துள்ளது. இவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பும், 12 சதவீதம் அதிகரித்து, 7.30 லட்சம் கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.இதில், ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள 775 மெகா கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மட்டும், 2.37 லட்சம் டாலராகும். தொழில்நுட்ப துறை சிறப்பாக வளர்ச்சி கண்டு வருவதையடுத்து, வரும், 2020ம் ஆண்டிற்குள், உலகளவில், பெரும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 3,800ஐ தாண்டும் என, வெல்த் – எக்ஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|