பதிவு செய்த நாள்
23 செப்2014
12:46
புதுடில்லி: நடப்பு, 2014 - 15ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் சேவை துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 6,180 கோடி ரூபாயாக (103 கோடி டாலர்) உயர்ந்துள்ளது என, தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது, கடந்த 2013 - 14ம் நிதியாண்டின் இதே காலத்தில், 6,120 கோடி ரூபாயாக (102 கோடி டாலர்) இருந்தது.
சேவை துறையின் கீழ், வங்கி, காப்பீடு, கூரியர், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில், சேவை துறையின் பங்களிப்பு, 60 சதவீதமாக உள்ளது. கடந்த 2012 - 13ம் நிதியாண்டில், சேவை துறையில், 483 கோடி டாலராக இருந்த அன்னிய நேரடி முதலீடு, 2013 - 14ம் நிதியாண்டில், 220 கோடி டாலராக சரிவடைந்தது. எனவே, மத்திய அரசு, நாட்டின் பல்வேறு துறைகளில், அதிகளவில் அன்னிய முதலீட்டை கவரும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|