பதிவு செய்த நாள்
26 செப்2014
01:46
மும்பை: நாட்டின் பணவீக்கத்தை குறைப்பது அவசிய தேவை, ஏனெனில் அது இன்னும் அதிகமாகவே உள்ளது என, ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.ஆறுதல்மும்பையில், புள்ளியியல் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இதுகுறித்து மேலும் கூறியதாவது:பணவீக்கம் தொடர்ந்து நிலையான அளவில் அதிகமாக உள்ளது என்பது, உண்மையில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே, அதை குறைக்க வேண்டும் என, திரும்ப திரும்ப வலியுறுத்தப்பட்டு வந்தது.தற்போது, அந்த பணவீக்க அதிகரிப்பு சங்கிலி தொடர் உடைக்கப்பட்டு விட்டது.
பணவீக்கம் கட்டுக்குள் வந்து உள்ளது என்பது, ரிசர்வ் வங்கிக்கு மிகவும் ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாகும்.நாட்டில் பொருளாதாரம் குறித்த ஏராளமான புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன. அவை முழுமையானதாக இல்லை.வேலைவாய்ப்புஎனவே, புள்ளிவிவரத்தின் தரம், அளவு மற்றும் நோக்கம் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை மாதத்திற்கு ஒருமுறை, முழுமையாகவும், குறித்த நேரத்திலும் தரும் வகையில், செயல் திட்டம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.மேலும், முறையான உற்பத்தியாளர் விலை குறியீட்டு எண் கணக்கீடு நம்நாட்டில் இல்லை. இதனை, ரிசர்வ் வங்கி, விரைவில் உருவாக்கும்.இவ்வாறு, ரகுராம் ராஜன் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|