பதிவு செய்த நாள்
30 செப்2014
00:04
புதுடில்லி: மத்திய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால், நடப்பு செப்டம்பரில் இதுவரையிலுமாக, மூலதன சந்தையில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 20 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது.இதன்படி, செப்., 1 முதல் 26ம் தேதி வரையிலுமாக, அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளில், நிகர அளவில், 5,117 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.இதே போன்று, கடன் பத்திர சந்தையிலும், 15,308 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட மொத்த முதலீடு, 20,425 கோடி ரூபாயை எட்டியுள்ளது.நடப்பாண்டில் இதுவரையிலுமாக, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தைகளில், மேற்கொண்ட முதலீடு, நிகர அளவில், 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதில், பங்குகளில், 83 ஆயிரம் கோடியையும், கடன்பத்திர சந்தையில், 1.20 லட்சம் கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளனர்.மத்தியில், நரேந்திர மோடி அரசு பதவியேற்றதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே, அன்னிய முதலீடு வரத்து சிறப்பான அளவில் உள்ளது.கடந்த, 22 ஆண்டுகளில், இந்தியாவில், அன்னிய நிதி நிறுனவனங்கள் மேற்கொண்ட ஒட்டு மொத்த நிகர முதலீடு, 20,400 கோடி டாலரை (9.92 லட்சம் கோடி ரூபாய்) எட்டியுள்ளது.இதில், 16 ஆயிரம் கோடி டாலர், பங்குகளிலும், 4,400 கோடி டாலர், கடன்பத்திர சந்தையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|