ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.88 உயர்வு ... சீரான விதை நடவிற்காக உருண்டை வடிவ விதைகள் அறிமுகம் சீரான விதை நடவிற்காக உருண்டை வடிவ விதைகள் அறிமுகம் ...
அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
00:04

புதுடில்லி: மத்திய அரசு எடுத்து வரும் சீர்திருத்த நடவடிக்கைகளால், நடப்பு செப்டம்பரில் இதுவரையிலுமாக, மூலதன சந்தையில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு, 20 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிஉள்ளது.இதன்படி, செப்., 1 முதல் 26ம் தேதி வரையிலுமாக, அன்னிய முதலீட்டாளர்கள், பங்குகளில், நிகர அளவில், 5,117 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளனர்.இதே போன்று, கடன் பத்திர சந்தையிலும், 15,308 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட மொத்த முதலீடு, 20,425 கோடி ரூபாயை எட்டியுள்ளது.நடப்பாண்டில் இதுவரையிலுமாக, அன்னிய முதலீட்டாளர்கள், இந்திய பங்கு சந்தைகளில், மேற்கொண்ட முதலீடு, நிகர அளவில், 2 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
இதில், பங்குகளில், 83 ஆயிரம் கோடியையும், கடன்பத்திர சந்தையில், 1.20 லட்சம் கோடி ரூபாயையும் முதலீடு செய்துள்ளனர்.மத்தியில், நரேந்திர மோடி அரசு பதவியேற்றதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே, அன்னிய முதலீடு வரத்து சிறப்பான அளவில் உள்ளது.கடந்த, 22 ஆண்டுகளில், இந்தியாவில், அன்னிய நிதி நிறுனவனங்கள் மேற்கொண்ட ஒட்டு மொத்த நிகர முதலீடு, 20,400 கோடி டாலரை (9.92 லட்சம் கோடி ரூபாய்) எட்டியுள்ளது.இதில், 16 ஆயிரம் கோடி டாலர், பங்குகளிலும், 4,400 கோடி டாலர், கடன்பத்திர சந்தையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)