பதிவு செய்த நாள்
09 அக்2014
16:03
புதுடில்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், பெட்ரோல் விலையில், லிட்டருக்கு ஒரு ரூபாயும், டீசல் விலையில், லிட்டருக்கு 2.50 ரூபாயும் அப்போது விலை குறைப்பு செய்யப்படலாம் என, டில்லி வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இம்மாதம் 1ல், பெட்ரோல் விலையில், 54 பைசா குறைப்பு செய்யப்பட்டது. அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி நாடு திரும்பியதும், டீசல் விலை குறைப்பை அறிவிப்பார் என கூறப்பட்ட நிலையில், டீசல் விலை குறைப்பு பற்றி மோடி எதுவும் அறிவிக்கவில்லை.
மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல், வரும் 15ல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், 15ம் தேதி தேர்தல் முடிந்ததும் டீசல் விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|