பதிவு செய்த நாள்
18 அக்2014
01:36
புதுடில்லி:உள்நாட்டில் சப்ளையை அதிகரித்து, விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கில், மத்திய அரசு, முதன்முறையாக, உருளைக்கிழங்கை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது.கடந்த சில வாரங்களாக, உருளைக்கிழங்கின் விலை ஏறுமுகமாகவே உள்ளது.
சில்லரை விற்பனையில், ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை (டில்லி), 35 – 40 ரூபாய் என்ற அளவில் உள்ளது.இந்நிலையில், உள்நாட்டு சந்தைகளில், உருளைக்கிழங்கின் விலை உயர்வை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து, வேளாண் செயலர் ஆசிஷ் பகுகுணா, மேலும் கூறும்போது:சப்ளையை அதிகரித்து விலையுயர்வை கட்டுப்படுத்த, உருளைக்கிழங்கை முதன் முறைாக, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டர் ‘நாபெட்’ அமைப்பிடம் கோரப்பட்டுள்ளது.இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வரும் நவம்பர் இறுதியில், இந்தியாவை வந்தடையும்.குறிப்பாக, ஐரோப்பா மற்றும் பாகிஸ்தான் நாடுகளிலிருந்து, உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படும்.
ஜனவரி வரையில் போதுமான சப்ளை இருப்பதை உறுதி செய்யும் வரை, இதன் இறக்குமதி தொடரும்.இவ்வாறு, பகுகுணா கூறினார்.2013 – 14ம் பருவத்தில், நம்நாடு 4.43 கோடி டன் உருளைக்கிழங்கை உற்பத்தி செய்தது. எனினும், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2.3 சதவீதம் குறைவாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|