பதிவு செய்த நாள்
21 அக்2014
00:33
திருப்பூர்:தமிழகத்தில் உள்ள கறிக்கோழி நிறுவனங்கள் மற்றும் பண்ணைகளில் இருந்து தினமும், 10 லட்சம் கறிக்கோழிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.புரட்டாசி காரணமாக, கடந்த மாதம் கறிக்கோழி விற்பனை குறைந்திருந்தது. பண்ணை கொள்முதல் விலை, கிலோவுக்கு 65 முதல் 75 ரூபாயாக இருந்தது. புரட்டாசி முடிந்ததும், கறிக்கோழி விலை உயர்ந்து வருகிறது.விற்பனை குறையும்.
தீபாவளியன்று வழக்கமான விற்பனையோடு, 30 சதவீதம் வரை அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனால், 25 லட்சம் முதல் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள், கடைகளுக்கு உற்பத்தி நிறுவனங்கள் அனுப்பி வைத்துள்ளன.பி.சி.சி., (பிராய்லர் கோஆர்டினேசன் கமிட்டி) செயலர் சுவாதி கண்ணன் கூறியதாவது:தமிழகத்தில் சராசரியாக ஒரு வாரத்திற்கு, 70 லட்சம் கறிக்கோழிகள் விற்பனையாகும். தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின்பும் விற்பனை குறைவாக இருக்கும்.தீபாவளி விற்பனை, ஒரு வாரத்தை ஈடு செய்யும் அளவிற்கு இருக்கும்.அதிக வரிகேரள மாநில அரசு, கறிக்கோழிக்கு அபரிமிதமான வரி விதித்ததால், தமிழகத்தில் இருந்து கறிக்கோழிகள் கேரளா செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.
தினமும் சில லோடுகள் மட்டுமே சென்று வருகிறது.எனவே, கோழி விற்பனை அதிகரிப்பு காரணமாக, விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றார்.இவ்வாறு அவர் கூறினார்.திருப்பூரில் கறிக்கோழி வியாபாரிகள் கூறுகையில்,தீபாவளிக்கு கறிக்கோழி விற்பனை 30 சதவீதம் வரை அதிகரிக்கும்; திருப்பூர் மாவட்டத்தில் மூன்று முதல் ஐந்து லட்சம் கறிக்கோழி விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இன்று (நேற்று) பண்ணை கொள்முதல் விலை, 83 ரூபாயாக இருந்தது. சில்லரை விற்பனை விலை, தோலுடன், தோல் நீக்கியது என, 130 முதல் 150 ரூபாய் வரை இருந்தது. தீபாவளியன்று இதே விலை நீடிக்க வாய்ப்புள்ளது என்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|