பதிவு செய்த நாள்
21 அக்2014
00:35
புதுடில்லி: நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்.,–செப்.,), இந்தியாவின் தோல் பொருட்கள் ஏற்றுமதி, 22 சதவீதம் அதிகரித்து, 20,940 கோடி ரூபாயாக (349 கோடி டாலர்) வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 17,220 கோடி ரூபயாக (287 கோடி டாலர்) இருந்தது.குறிப்பாக, காலணிகள், காலணி உதிரிபாகங்கள், குதிரைகளுக்கு தேவையான சேணம் உள்ளிட்ட விலங்கினங்களுக்கான தோல் கவசங்கள் ஏற்றுமதி, சிறப்பான அளவில் சூடுபிடித்துள்ளன.இதே வளர்ச்சி நிலை நீடித்தால், நடப்பு நிதியாண்டில், தோல் பொருட்கள் ஏற்றுமதி,732 கோடி டாலரை (43,920 கோடி ரூபாய்) எட்டும்.இது, ஒரு சாதனை அளவாகும் என, தோல் பொருட்கள் ஏற்றுமதி கவுன்சிலின் தலைவர் ராஜேந்திரா கே.ஜலான் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|