ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.256 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.256 குறைவு ... ரூபாய் மதிப்பில் உயர்வு:61.53 ரூபாய் மதிப்பில் உயர்வு:61.53 ...
நாட்டின் நெல் கொள்முதல் 8 சதவீதம் சரிவடைந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2014
02:06

புதுடில்லி: நடப்பு 2014–15ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், இதுவரையில், மத்திய அரசின் முகமை அமைப்புகளின் நெல் கொள்முதல், 8 சதவீதம் சரிவடைந்து, 92 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இது, கடந்தாண்டு இதே காலத்தில், 1 கோடி டன்னாக அதிகரித்து காணப்பட்டது.
கோதுமை:மத்திய அரசின் சார்பில், இந்திய உணவு கழகம் (எப்.சி.ஐ.,) மற்றும் மாநில முகமை அமைப்புகள், அரிசி மற்றும் கோதுமையை விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் (எம்.எஸ்.பி.,) செய்கின்றன.
நெல் சந்தை பருவம் என்பது, அக்டோபர் முதல் செப்டம்பர் வரையில் கணக்கிடப்படுகிறது.நடப்பாண்டில், 3 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தற்போது, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் இருந்து அதிகளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அறுவடை துவங்கியவுடன், இதர மாநிலங்களிலும் கொள்முதல் நடவடிக்கைகள் விறுவிறுப்படையும் என, இந்திய உணவு கழகத்தின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரியானாநடப்பு சந்தைப் பருவத்தில் இதுவரையில், பஞ்சாபிலிருந்து, 72.30 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்தாண்டில், 74.90 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது.அரியானா மாநிலத்திலும் நெல் கொள்முதல், 25 லட்சம் டன்னிலிருந்து, 18.70 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.இதேபோன்று, சண்டிகரிலும், இதன் கொள்முதல், 11 ஆயிரம் டன்னிலிருந்து, 10 ஆயிரம் டன்னாக சரிவடைந்துஉள்ளது.அதேசமயம், உத்தரபிரதேசத்தில் நெல் கொள்முதல், 15 ஆயிரம் டன்னிலிருந்து, 18 ஆயிரம் டன்னாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில், நெல் கொள்முதல் சுணக்கமாகவே உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, கடந்தாண்டின் இதே காலத்தில்,42ஆயிரம் டன்னாக அதிகரித்து காணப்பட்ட இதன்கொள்முதல், தற்போது, வெறும் 2,500 டன்னாக சுருங்கியுள்ளது.
தென் மாநிலங்கள்அடுத்த 10 நாட்களில்,பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில், கொள்முதல் நடவடிக்கைகள் நிறைவு பெற உள்ளன. இதைத் தொடர்ந்து, தென் மற்றும் மேற்கு மாநிலங்களில், நெல் கொள்முதல் விரைவில் துவங்க உள்ளது என, அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, கரீப் பருவத்தில், 3.20 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 2.66 கோடி டன் மட்டுமே எட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)