பதிவு செய்த நாள்
14 நவ2014
05:04
புதுடில்லி: மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதை எடுத்துக்காட்டும் விதமாக, சென்ற செப்டம்பரில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி, 3 மாதங்களில் இல்லாத அளவாக, 2.5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 2.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. கணக்கீட்டு மாதத்தில், சுரங்கம் மற்றும் தயாரிப்பு துறை உற்பத்தி நடவடிக்கைகள் விறுவிறுப்புஅடைந்துள்ளன.தொழில்துறை உற்பத்தி எண் கணக்கிடுவதில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, 75 சதவீதமாக உள்ளது.கணக்கீட்டு மாதத்தில், தயாரிப்பு மற்றும் சுரங்க துறைகள் உற்பத்தி முறையே, 2.5 சதவீதம் மற்றும் 0.7 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டுள்ளன. இவை தவிர, தேவை அதிகரித்ததையடுத்து, பொறியியல் பொருட்கள் உற்பத்தி, மதிப்பீட்டு மாதத்தில், 11.6 சதவீதம் உயர்ந்துள்ளது.நடப்பு 2014–15ம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்.,–செப்.,), தொழில்துறை உற்பத்தி, 2.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 0.5 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|