பதிவு செய்த நாள்
15 நவ2014
23:57
புதுடில்லி: ‘உலகளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா விரைவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்’ என, மத்திய உருக்கு துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.தற்போதைய நிலையில், சர்வதேச அளவில், உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஜப்பான் மற்றும் அமெரிக்கா முறையே, 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.
நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இந்தியா, 6.24 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்து, நான்காவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.செயில், டாட்டா ஸ்டீல் மற்றும் ஆர்.ஐ.என்.எல்., உள்ளிட்ட நிறுவனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்ததையடுத்து, கடந்த, 2013–14ம் நிதியாண்டில், கச்சா உருக்கு உற்பத்தி, 10.10 கோடி டன் என்ற அளவில் இருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு, வரும், 2025–26ம் நிதியாண்டிற்குள், உருக்கு உற்பத்தி திறனை மூன்று மடங்கு அதிகரித்து, 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.உற்பத்தி திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், உள்நாட்டில், தனிநபர் உருக்கு பயன்பாடு, 60 கிலோ என்ற அளவில் உள்ளது. இது, உலக சராசரி அளவான, 200 கிலோவுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாகும்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் தனிநபர் உருக்கு பயன்பாடு, 10 கிலோ என்ற அளவில் தான் உள்ளது. எனவே, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், உருக்கு பயன்பாடு மிகவும் சிறப்பான அளவில் வளர்ச்சி காண, அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இது, உருக்கு துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என, தோமர் மேலும் கூறினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உருக்கு துறையின் பங்களிப்பு, 2 சதவீதமாக உள்ளது. இத்துறையில், 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|