முட்டை விலை 356 காசுகள்முட்டை விலை 356 காசுகள் ... பருத்தி விலை சீரானதால் நுாலிழை விற்பனை விறுவிறு பருத்தி விலை சீரானதால் நுாலிழை விற்பனை விறுவிறு ...
உலக உருக்கு உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தை பிடிக்கும்: தோமர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 நவ
2014
23:57

புதுடில்லி: ‘உலகளவில், உருக்கு உற்பத்தியில், இந்தியா விரைவில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும்’ என, மத்திய உருக்கு துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.தற்போதைய நிலையில், சர்வதேச அளவில், உருக்கு உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, ஜப்பான் மற்றும் அமெரிக்கா முறையே, 2வது மற்றும் 3வது இடங்களில் உள்ளன.
நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இந்தியா, 6.24 கோடி டன் உருக்கை உற்பத்தி செய்து, நான்காவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது.செயில், டாட்டா ஸ்டீல் மற்றும் ஆர்.ஐ.என்.எல்., உள்ளிட்ட நிறுவனங்களின் உற்பத்தி திறன் அதிகரித்ததையடுத்து, கடந்த, 2013–14ம் நிதியாண்டில், கச்சா உருக்கு உற்பத்தி, 10.10 கோடி டன் என்ற அளவில் இருந்தது.
இந்நிலையில், மத்திய அரசு, வரும், 2025–26ம் நிதியாண்டிற்குள், உருக்கு உற்பத்தி திறனை மூன்று மடங்கு அதிகரித்து, 30 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது.உற்பத்தி திறனை அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், உள்நாட்டில், தனிநபர் உருக்கு பயன்பாடு, 60 கிலோ என்ற அளவில் உள்ளது. இது, உலக சராசரி அளவான, 200 கிலோவுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவாகும்.
குறிப்பாக, கிராமப்புறங்களில் தனிநபர் உருக்கு பயன்பாடு, 10 கிலோ என்ற அளவில் தான் உள்ளது. எனவே, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில், உருக்கு பயன்பாடு மிகவும் சிறப்பான அளவில் வளர்ச்சி காண, அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன. இது, உருக்கு துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்த வாய்ப்பாக அமையும் என, தோமர் மேலும் கூறினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உருக்கு துறையின் பங்களிப்பு, 2 சதவீதமாக உள்ளது. இத்துறையில், 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.-

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)