பதிவு செய்த நாள்
18 நவ2014
00:38
திண்டுக்கல்:ஆறு மாதங்களாக தடை விதிக்கப்பட்டிருந்த, பெல்லாரி வெங்காயம் ஏற்றுமதி வர்த்தகம், திண்டுக்கல்லில் மீண்டும் துவங்கியது.திண்டுக்கல்லில் இருந்து இலங்கைக்கு, பெல்லாரி வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர் மழையினால், வெங்காயத்தின் மேற்பகுதி சிதைந்தும், தோல் பகுதி அழுகியும் இருந்தன.இதனால், பெல்லாரி வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, வரத்து அதிகரித்திருப்பதோடு, முதல் தரமாக இருப்பதால், ஆறு மாதத்திற்கு பின், ஏற்றுமதி தடை விலக்கப்பட்டுள்ளது.வியாபாரி, அகிலன் கூறுகையில், ‘‘முதற்கட்டமாக, இலங்கையில் உள்ள உணவு விடுதிகளின் பயன்பாட்டிற்காக, 17 டன் பெல்லாரி வெங்காயம், துாத்துக்குடி துறைமுகத்திலிருந்து அனுப்ப உள்ளோம். இதற்காக, 10 கிலோ, 26 கிலோ எடை அளவுகளில் மூட்டைகள் தயாராகி வருகின்றன,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|