பதிவு செய்த நாள்
18 நவ2014
00:43
நாமக்கல்:தமிழகம் மற்றும் கேரளாவில், முட்டை கொள்முதல் விலை, 367 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர் விவாதித்தனர். அதையடுத்து, முட்டை கொள்முதல் விலையில், 356 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 11 காசுகள் அதிகரித்து, 367 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாட்டின் பிற மண்டலங்களில், முட்டை விலை (காசுகளில்) நிலவரம்:சென்னை, 391, பெங்களூரு, 390, மைசூரு, 380, ஐதராபாத், 374, மும்பை, 410, விஜயவாடா, 367, கோல்கட்டா, 406, பர்வாலா, 385, டில்லி, 400.இவ்வாறு, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 68 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது.பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அதன் விலை கிலோ, 70 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|