பதிவு செய்த நாள்
01 டிச2014
00:42
குன்னுார்:குன்னுார் ஏல மையங்களில், வாரந்தோறும், 50 சதவீதம் தேயிலை துாள் தேக்கமடைந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில், பசுந்தேயிலையின் மகசூல் அதிகமாகி, ஏல மையங்களில், தேயிலை துாளின் விற்பனை குறைந்து வருகிறது. வாரந்தோறும், 25 – 50 சதவீத தேயிலை துாள், விற்பனையாகாமல் தேக்கமடைந்து வருகிறது; தேக்கத்தால், பசுந்தேயிலையின் விலை சரிந்து வருகிறது.நடப்பு வாரத்தில், சாதாரண ரக பசுந்தேயிலை, கிலோ, 910 ரூபாய்; நடுத்தர ரகம், 1,415 ரூபாய்; உயர் ரகம், 1,819 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்துக்குப் பின்பும், 50 சதவீதம் தேயிலை தேக்கம் அடைந்தது.விவசாயிகள் வினியோகிக்கும் பசுந்தேயிலைக்கு, ஏழு ரூபாய் மட்டுமே கிடைத்து வருவதால், அவர்கள் தவித்து வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|