பதிவு செய்த நாள்
03 டிச2014
00:20
மும்பை:சட்ட விரோதமாக, பொதுமக்களிடம் நிதி திரட்டிய மூன்று நிறுவனங்களின் செயல் பாட்டிற்கு, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தடை விதித்துள்ளது.
பெடரல் அக்ரோ கமர்சியல்ஸ், கோல்கட்டா ஆர்யன் புட் இண்டஸ்ட்ரீஸ், வாரிஸ் அக்ரோ டெக் என்ற, அந்த மூன்று நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இயக்குனர்கள், பங்கு வர்த்தகம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.இந்நிறுவனங்கள், திரும்ப பெறத்தக்க முன்னுரிமை பங்குகளை வெளியிட்டு, நிதி திரட்டியுள்ளது தெரியவந்து உள்ளது.
‘செபி’ விதிகளின் படி, நிறுவனங்கள் சுயவிவரம் அளிக்காமல், பங்குச் சந்தையில் பட்டியலிடாமல், மேற்கண்ட முறையில் நிதி திரட்டுவது குற்றமாகும்.இந்த மூன்று நிறுவனங்களும், ௯௦௦க்கும் அதிகமான முதலீட்டாளர்களிடம் இருந்து, ஒரு கோடியே ௧௨ லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கவர்ச்சியான விளம்பரங்களால், அப்பாவி மக்கள் ஏமாறுவதை தடுக்கும் நோக்கில், இதுபோன்ற நடவடிக்கையை, ‘செபி தொடர்ந்து எடுத்து வருகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|