பதிவு செய்த நாள்
17 ஜன2015
09:32
புதுடில்லி: அனைவரும் எதிர்பார்த்தபடி, பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு, 2.42 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு, 2.25 ரூபாயும் குறைக்கப் பட்டு உள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நள்ளிரவு அமல்:
இந்த விலை குறைப்பு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில், 61.33 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 58.91 ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த 44 மாதங்களுக்கு பின், இந்த அளவிற்கு பெட்ரோல் விலை சரிவடைந்துள்ளது. ஒரு லிட்டர் டீசல் விலை, 50.51லிருந்து, 48.26 ரூபாயாகக் குறைந்துள்ளது. பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல், நேற்று வரை, பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 14.69 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 10.71 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 115 டாலராக இருந்தது. இது, தற்போது, 46 டாலராக சரிவடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பெட் ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை யும், மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான உற்பத்தி வரி, தலா, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளது.
உற்பத்தி வரி:
பா.ஜ., அரசு கடந்த மூன்று மாதங்களில், நான்காவது முறையாக, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை உயர்த்தி உள்ளது. இந்த வகையில், பெட்ரோலுக்கான உற்பத்தி வரி, லிட்டருக்கு, 8.95 ரூபாயும், டீசலுக்கு, 7.96 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி வரி உயர்வு, இன்று முதல் அமலுக்கு வரும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு முறை பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரி உயர்த்தப்பட்டுள்ளதன் மூலம், மத்திய அரசுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், நிதிப் பற்றாக்குறையை, 4.1 சதவீதம் என்ற அளவிற்கு வைத்திருக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உற்பத்தி வரி உயர்ந்தாலும், பெட்ரோல், டீசல் விலை குறைப்பை இது பாதிக்காது என, அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|