பதிவு செய்த நாள்
28 ஜன2015
12:08
நியூடெல்லி : குளோபல் குவாலிட்டி அவார்ட்ஸ் நிறுவனம், சேவை மற்றும் வர்த்தக பிரிவுகளில் தர மதிப்பீஐ செய்யும் சுயசார்பு அமைப்பாகும். சக்திவாய்ந்த பிராண்டுகளுக்காகவும், தனிமனித சாதனைகளுக்காகவும், நுகர்வோர் சேவை துறையில் புதுமைகளை படைப்போருக்காகவும் வழங்கப்படும் குளோபல் குவாலிட்டி விருதுகள் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுபவை.டெல்லியில் நடைபெற்ற இந்த வருட குளோபல் குவாலிட்டி அவார்ட்ஸ் விழாவில், சென்னையின் புகழ்பெற்ற குடியிருப்பு கட்டுமான நிறுவனமான அமர்பிரகாஷ் நிறுவனம், ரியல் எஸ்டேட் துறையில் ஆற்றியுள்ள பெரும்பங்கிற்காக கெளரவிக்கப்பட்டது. அமர்பிரகாஷ் நிறுவனம், சிறந்த தரமான குடியிருப்பு கட்டுமானத்திற்கான விருதை, "தி ராயல் கேஸ்ட்ல்" புராஜெக்டிற்காக வென்றது. நிறுவனத்தின் சார்பாக, திரு. சரவணன் (GM - Operations) அவர்கள், பாலிவுட் நடிகை கரிஷ்மா கபீரிடமிருந்து விருதை பெற்றுக்கொண்டார்.மேலும் அவர் பேசுகையில், இது ஒரு பெருமையான தருணம். சமுதாயத்திற்கு தரமான குடியிருப்புகளை தருவதை நோக்கியே, எங்கள் நிறுவனம் பயணிக்கிறது. இந்த விருதை, அமர்பிரகாஷ் குழுவிற்கு அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|