பதிவு செய்த நாள்
02 பிப்2015
03:43
ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், வெள்ளைப் பூண்டு விளைச்சல் குறைந்ததால், அதன் விலை கிலோ, 200 ரூபாயைத் தொட்டது.ஊட்டியின் பிரத்யேக காலநிலை காரணமாக, இங்கு விளையும் வெள்ளைப் பூண்டின் மணம் சிறப்பாக இருக்கும். இங்கிருந்து மேட்டுப்பாளையம் சந்தைக்கு அனுப்பி, அங்கிருந்து கோவை, சென்னை மற்றும் பக்கத்து மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்தாண்டு, ஊட்டியில் நிலவிய அசாதாரண காலநிலையால், வெள்ளைப் பூண்டு விளைச்சலில் அடி விழுந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகள், பூண்டு விளைச்சலில் ஈடுபடுவதை குறைத்துக் கொண்டனர். இதனால், தற்போது பூண்டுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.இதனால், ஊட்டி மார்க்கெட்டில் ஒரு கிலோ வெள்ளைப் பூண்டு, கிலோ, 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாவட்ட உழவர் சந்தைகளில் கிலோ, 170 முதல், 180 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|