பதிவு செய்த நாள்
22 மார்2015
17:09
புதுடில்லி : உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு, இந்திய அணி முன்னேறியதை, கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விமான நிறுவனங்கள், ஆஸ்திரேலியாவிற்கான விமான கட்டணங்களை, சத்தம் இல்லாமல் கணிசமான அளவு உயர்த்தியுள்ளன.
டில்லியில் இருந்து சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு செல்லும் விமான பயணத்திற்கான கட்டணங்கள், கடந்த வாரமே உயர்த்தப்பட்டிருந்த நிலையில், மீ்ணடும் அந்த கட்டணத்தை, 15 முதல் 20 சதவீதம் அளவிற்கு, நிறுவனங்கள் உயர்த்துவதாக அறிவித்துள்ளன.
உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும்பட்சத்தில், ஆஸ்திரேலிய நகரங்களுக்கான விமான பயண கட்டணம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக, யாத்ரா.காம் நிறுவன தலைவர் சரத் தால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சரத் தால் கூறியதாவது, இந்தியாவில் உள்ள மெட்ரோ ஏர்போர்ட்களிலிருந்து, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் மெல்போர்ன் நகரங்களுக்கு செல்ல கடந்த வாரம் ரூ. 50 ஆயிரமாக இருந்த விமான கட்டணம், தற்போது ரூ. 60 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்திய அணி, பைனலுக்கு முன்னேறும் பட்சத்தில், விமான கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார்.
26ம் தேதி அடிலெய்டில் நடக்கும் அரையிறுதி போட்டியில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
29ம் தேதி, உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி, மெல்போர்னில் நடைபெற உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|