பதிவு செய்த நாள்
26 மே2015
17:08
மும்பை : இந்திய பங்குசந்தைகளில் சரிவு தொடர்கின்றன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் சரிவுடன் துவங்கிய பங்குசந்தைகள், சரிவுடனேயே முடிந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்ற – இறக்கத்தாலும், முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்ததாலும், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட சரிவாலும் இன்றைய வர்த்தகம் நாள்முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 112.47 புள்ளிகள் சரிந்து 27,531.41–ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 30.90 புள்ளிகள் சரிந்து 8,339.35–ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் ஐடிசி நிறுவன பங்குகள் 1.05 சதவீதம் சரிந்தது. இதைத்தொடர்ந்து சன் பார்மா, என்டிபிசி., ரிலையன்ஸ், ஐசிஐசிஐ., எச்டிஎப்சி., டாக்டர் ரெட்டி உள்ளிட்ட நிறுவன பங்குகளும் சரிவுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|