பதிவு செய்த நாள்
11 ஆக2015
11:48
இந்தியாவில், கார் விற்பனையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுசூகி நிறுவனம், ‘எஸ் – கிராஸ்’ என்ற புதிய காரை, அறிமுகப்படுத்தி உள்ளது. மாருதி சுசூகி நிறுவனம், தன் கார்களை விற்பனை செய்ய, ‘நெக்சா’ என்ற பெயரில், தனி ஷோரூமை, நாடெங்கும் திறந்து வருகிறது. அவற்றில், மட்டுமே, ‘எஸ் – கிராஸ்’ ரக கார் கிடைக்கும். எஸ் – கிராஸ் காரில், 1.6 லிட்டர் டீசல், டி.டி.ஐ.எஸ்., 320 மாடலில், 118 குதிரை சக்தி திறனுடைய இன்ஜினும், 1.3 லிட்டர் டீசல், டி.டி.ஐ.எஸ்., 200 மாடலில், 89 குதிரை சக்தி திறனுடைய இன்ஜினும் பொருத்தப்பட்டு உள்ளன. அவற்றில், முறையே, 6 கியர்கள், 5 கியர்கள் உள்ளன. எஸ் – கிராஸ் கார் கூரையின் மீது உள்ள, ‘ரூப் ரெயிலிங்’ அமைப்பு நேர்த்தியாக, வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ரக கார், முக்கிய அம்சங்களுக்கு ஏற்ப, ‘சிக்மா, டெல்டா, ஜீட்டா, ஆல்பா’ என்ற வகைகளில் வெளிவந்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|