பதிவு செய்த நாள்
24 ஆக2015
09:46
மும்பை : உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக இந்திய பங்குசந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் காலை 9.15மணி, மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்தது. அதேப்போல் தேசிய பங்குசந்தையான நிப்டி 8000 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு கடுமையாக (ரூ.66.47) சரிந்ததாலும், உலகளவில் பங்குசந்தைகளில் ஏற்பட்ட சரிவாலும் இந்திய பங்குசந்தைகள் இத்தகைய கடும் சரிவை சந்தித்திருக்கின்றன. காலை 9.30 மணியளவில் சென்செக்ஸ் 863.64 புள்ளிகள் சரிந்து 26,502.43 புள்ளிகளிலும், நிப்டி 273.55 புள்ளிகள் சரிந்து 8,026.40 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. வாரத்தின் முதல்நாளிலேயே பங்குசந்தைகள் பெரும் சரிவை சந்தித்திருப்பது முதலீட்டாளர்களை சோகமடைய செய்துள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|