பதிவு செய்த நாள்
07 செப்2015
14:23
திண்டுக்கல்: வரத்து குறைந்ததால், திண்டுக்கல்லில், எலுமிச்சை விலை உயர்ந்து, கிலோ 45 ரூபாய்க்கு விற்பனையானது.
சிறுமலை, ரெட்டியார்சத்திரம், மஞ்சள்பரப்பு, ஏ.வெள்ளோடு, பெரும்பாறை உள்ளிட்ட பகுதிகளில், 3,000 ஏக்கரில், எலுமிச்சை சாகுபடியாகிறது. தற்போது பிஞ்சு விட்டு காய்க்கும் பருவம் என்பதால், விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வரத்து குறைந்து, 6 டன்னுக்கு குறைவான பழங்களே, நேற்று விற்பனைக்கு வந்தன. கேரளா வியாபாரிகள் அதிகளவில் வாங்கியதால், கடந்த மாதம் கிலோ, 25 ரூபாய்க்கு விற்ற பழங்கள் நேற்று, 45 ரூபாயாக உயர்ந்தது.
வியாபாரி ஒருவர் கூறுகையில், 'மலை எலுமிச்சையில், அதிகளவில் சாறு கிடைப்பதால், கேரள வியாபாரிகள் விரும்பி வாங்கிச் செல்வர். ஓணம் பண்டிகையில் இருந்தே, அவர்கள் அதிகளவில் வாங்கி செல்வதால், விலை உயர்ந்துள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|