பதிவு செய்த நாள்
28 செப்2015
13:39
புதிதாக வரும் கார்களில், திசைகாட்டும், ‘இன்போடெயின்மென்ட்’ போன்ற பல தகவல் தொழில்நுட்ப அம்சங்கள், அதிகளவில் இடம்பெற துவங்கியுள்ளன. ‘கூகுள், ஆப்பிள்’ போன்ற நிறுவனங்கள், டிரைவர் இல்லாத கார்களை வடிவமைத்து வரும் நிலையில், அவை எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது,
அமெரிக்காவில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம், புதிய தொழில்நுட்பத்துடன், ‘ஹேக்கிங்’ போன்ற ஆபத்துகளும் சேர்ந்து வருவதை உணர்த்துகிறது. அமெரிக்காவில், இன்டர்நெட் இணைப்புடன் கூடிய, பல அம்சங்கள் நிறைந்த காரை, மைக்கேல் பிராஷ் என்பவர் ஓட்டிச் சென்றபோது, காரில், ‘ஏசி’ தானாக அதிகரித்தது; ‘வைப்பர்’ தானாகவே அசைந்தாடியது; ரேடியோ தானாக பாடியது. ஒருகட்டத்தில், ஆக்சிலேட்டரும், அவரது கட்டுப்பாட்டை மீறி நின்றுவிட்டது.
அது, கம்ப்யூட்டரில் புகுந்து, ‘ஹேக்கிங்’ செய்வோரின் வேலை என்பது, அந்த காரின் டிஜிட்டல் திரையில் இருவர் தோன்றி, பிராஷை கிண்டலடித்து பேசியபோது தான் புரிந்தது. இதையடுத்து, இவ்வகை காரை உருவாக்கிய, ‘கிராண்ட் செரோகி’ நிறுவனம், 14 லட்சம் கார்களை, உரிமையாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்றது. கார்களை, ஸ்மார்ட்போன் போன்று மாற்ற முயல்வதன் ஆபத்தை, இது புரிய வைத்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|