வர்த்தகம் » பொது
வங்கி கடன்களுக்கான வட்டி விகிதம் 0.50 சதவீதம் குறைப்பு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 செப்2015
11:11
மும்பை : வங்கி கடன்களுக்கான வட்டி வகிதத்தை 0.50 சதவீதம் குறைத்துள்ளது ரிசர்வ் வங்கி. பணவீக்கம் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்தது. இதன் காரணமாக வங்கி வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் குறைக்கப்பட்டது. இதன்மூலம் 7.25 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக வட்டி விகிதம் குறைந்துள்ளது. அதேசமயம் சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஏற்கனவே இருந்த 4 சதவீத்திலேயே நீடிக்கிறது.
மேலும் நடப்பாண்டுக்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும், 2016, ஜனவரி மாதத்திற்குள் பணவீக்கம் 5.8 சதவீதத்திற்கு வரும் என்று ரிசர்வ் வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த வட்டி குறைப்பு மூலம் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி வகிதம் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 29,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 29,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 29,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 29,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 29,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!