பதிவு செய்த நாள்
29 செப்2015
13:05
வடகிழக்கு பருவ மழைக்காலம் துவங்க உள்ளது. பொதுவாக, வெயில் காலத்தை விட, மழைக்காலத்தில், வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். கார் உரிமையாளர்கள் அதிக முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மழைக்காலத்தில், ‘ஹெட்லைட்’ மற்றும் காரின் பின்புறத்தில் உள்ள, ‘டெயில் லேம்ப்’களில், தண்ணீர் புகுந்து விடும்போது, விளக்கின் ஒளி மங்கலாகி விடும். சில நேரங்களில், நடுவழியில் திடீரென பழுதாகி, பயணத்துக்கு தடை போடுவதோடு, உயிருக்கு ஆபத்தாகவும் முடியலாம். அதனால், விளக்குகளை மூடியிருக்கும் கண்ணாடி தடுப்பில், இடைவெளி இருக்கிறதா என, சோதித்து பார்க்க வேண்டும். இடைவெளி இருந்தால், கடைகளில் விற்கும் தரமான பசையால், அதை ஒட்டி விடலாம்; முடியாத பட்சத்தில், அவற்றை மாற்றிவிடுவது நல்லது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|