பதிவு செய்த நாள்
12 அக்2015
10:09
மும்பை : வாரத்தின் துவக்கநாளான இன்று(அக்., 12ம் தேதி) இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 225.53 புள்ளிகள் உயர்ந்து 27,305.04-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 54.80 புள்ளிகள் உயர்ந்து 8,244.50-ஆகவும் இருந்தன. செப்டம்பர் மாதத்திற்கான பணவீக்கம், தொழில்துறை உற்பத்தி போன்றவை வெளியாக இருப்பதால் அதன்மீதான எதிர்பார்ப்பாலும், இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு 9.75 சதவீதம் உயர்ந்து இருப்பதாலும் அது தொடர்பான பங்குகள் உயர்ந்துள்ளதால் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இந்திய பங்குச்சந்தைகள் போன்று ஆசியாவின் இதர பங்குச்சந்தைகளான ஹாங்காங்கின் ஹேங்சேங் 1.29 சதவீதமும், ஷாங்காய் பங்குச்சந்தை 3.43 சதவீதமும் உயர்ந்து காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|