பதிவு செய்த நாள்
14 அக்2015
12:58
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களின் மனதில் இடம்பிடித்தது மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும், அவர்களின் ஆதரவை பெற துவங்கியுள்ளது. அந்த நிறுவனத்தின், ‘பேஸ்புக்’ பக்கத்தை, 60 லட்சம் ரசிகர்கள், ‘லைக்’ செய்துள்ளனர். பேஸ்புக்கில், 2011-ல், காலடி எடுத்து வைத்த அந்த நிறுவனம், நான்கு ஆண்டுகளில், இந்த எண்ணிக்கையை அடைந்துள்ளது.
சமீபத்தில், ‘கிரெட்டா’ என்ற, எஸ்.யு.வி., வாகனத்தை அறிமுகப்படுத்தும் போது, சமூக வலைதளத்தில் அதுபற்றி, ஷூண்டாய் நிறுவனம் முனைப்புடன் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, அதன் தலைவர் பி.எஸ்.சியோ கூறும்போது, ‘‘எங்களின் சமூக வலைதள பக்கத்திற்கு, 60 லட்சத்தை தாண்டி, ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது. அவர்களின் ஆலோசனைகள், கருத்துக்களை கேட்டு, மாற்றங்களை மேற்கொண்டு வருவதே நிறுவனத்தின் வளர்ச்சிக்கு காரணம்,’’என்றார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|