பதிவு செய்த நாள்
03 நவ2015
16:18
மும்பை : கடந்த 6 நாள் சரிவுக்கு பின்னர் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட எற்றம், முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவு வாங்க தொடங்கியதன் பலனாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 31.44 புள்ளிகள் உயர்ந்து 26,590.59-ஆகவும், நிப்டி 9.90 புள்ளிகள் உயர்ந்து 8,060.70-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1449 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1242 நிறுவன பங்குகள் சரிந்தும், 134 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. குறிப்பாக என்டிபிசி., ஓஎன்ஜிசி., மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போன்ற நிறுவன பங்குகள் உயர்ந்தும், டாடா மோட்டார்ஸ், எல்அண்ட்டி., பார்தி, டாடா ஸ்டீல் நிறுவன பங்குகள் சரிவையும் சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|