பதிவு செய்த நாள்
12 நவ2015
12:31
மாருதி சுசூகி நிறுவனம், கார் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. நம் நாட்டில், 15 ஆண்டுகளில் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமையை, அந்த நிறுவனத்தின், சிறிய ரக காரான, ‘ஆல்டோ’ பெற்றுள்ளது. அந்த, 800 சி.சி., இன்ஜின் கார், 2000 ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2012ல், காரில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 1,000 சி.சி., காரான, ‘ஆல்டோ கே10’, 2010ல் சந்தையில் புதிதாக களம் இறக்கப்பட்டது.
இந்நிலையில், ஆல்டோ கார்களின் ஒட்டுமொத்த விற்பனை, 29 லட்சத்தை சமீபத்தில் கடந்துள்ளது. இதற்கு முன், இந்த சாதனையை மாருதி சுசூகி நிறுவனத்தின், ‘எம்800’ கார் நிகழ்த்தி இருந்தது.
எம்800 கார் விற்பனை, 2014ல் நிறுத்தப்பட்டபோது, 30 ஆண்டுகளில், 28 லட்சம் கார்கள் விற்பனை ஆகியிருந்தன. 15 ஆண்டுகளுக்குள், 29 லட்சத்து, 19 ஆயிரத்து, 819 ஆல்டோ கார்கள் விற்பனை என்ற புதிய சாதனை இப்போது நிகழ்த்தப்பட்டுள்ளது. குறைந்த விலை, சிறந்த, ‘மைலேஜ்’ ஆகியவற்றின் காரணமாக, நடுத்தர வர்க்க மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையை, ஆல்டோ கார் பெற்றுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|