பதிவு செய்த நாள்
06 ஜன2016
17:06
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. சீன பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டன, தொடர்ந்து இரண்டாவது நாளும் சரிவை சந்தித்த நிலையில், இன்றும்(ஜன.6ம் தேதி) பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன. குறிப்பாக வடகொரியா ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தியுள்ளதால் உலகளவில் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவை கண்டதால் இந்திய பங்குச்சந்தைகளும் சரிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 174.01 புள்ளிகள் சரிந்து 25,406.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 46.40 புள்ளிகள் சரிந்து 7,741-ஆகவும் முடிந்தன.
மேலும் பங்குச்சந்தைகளில் இந்த சரிவு நிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்று சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|