தங்கம் விலை இன்று(ஜன.20) மாலைநிலவரப்படி ரூ.88 உயர்வுதங்கம் விலை இன்று(ஜன.20) மாலைநிலவரப்படி ரூ.88 உயர்வு ... சரிவில் ரூபாயின் மதிப்பு - ரூ.68 சரிவில் ரூபாயின் மதிப்பு - ரூ.68 ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
ஆட்டம் கண்ட இந்திய பங்குச்சந்தைகள் - ரூபாயின் மதிப்பும் 68-ஐ எட்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2016
17:08

மும்பை : கடந்த 20 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்துள்ளன இந்திய பங்குச்சந்தைகள். மேலும் ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து ரூ.68-ஐ தாண்டியது.
கடந்த நான்கு நாட்கள் சரிவுக்கு பின்னர் நேற்று(ஜன.19ம் தேதி) தான் பங்குச்சந்தைகள் சற்று உயர்வை சந்தித்தன. ஆனால் இன்றைய வர்த்தகம் துவங்கும்போதே கடும் சரிவுடன் துவங்கின. இன்றைய வர்த்தக‌நேர துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 350 புள்ளிகளும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 100 புள்ளிகளும் சரிவுடன் துவங்கின. தொடர்ந்து சரிவிலேயே இருந்த பங்குச்சந்தைகள், நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன.
24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்ற சென்செக்ஸ் : வர்த்தகம் முடியும் போது மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 417.80 புள்ளிகள் சரிந்து 24,062.04-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 125.80 புள்ளிகள் சரிந்து 7,309.30-ஆகவும் முடிந்தன. இன்றைய வர்த்தகத்தின் போது சென்செக்ஸ் ஒருக்கட்டத்தில் 600 புள்ளிகள் வரை சரிந்து 24 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
ஏன் இந்த சரிவு...?
* சீனா பொருளாதார மந்தம் : சீனாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்தது. இதன் தாக்கம் உலக பங்குச்சந்தைகள் அனைத்திலும் எதிரொலித்தது. சீன பங்குச்சந்தைகள் தவிர்த்து ஐரோப்பிய பங்குச்சந்தைகளும் சரிவை சந்தித்தன.
* கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி : மேலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவதும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின. கடந்த 2003ம் ஆண்டுக்கு பின்னர் இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 27 அமெரிக்க டாலரை எட்டியது. இதன் வீழ்ச்சியும் பங்குச்சந்தைகள் சரிய காரணமாகின.
* ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி - ரூ.68-ஐ தாண்டியது : இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான சரிவை சந்தித்து ரூ.68 எனும் நிலையை எட்டியது.
இந்த மூன்று முக்கிய காரணங்களாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததாலும் இன்றைய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்து உள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகம் முடியும் போது சுமார் 543 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 2071 நிறுவன பங்குகள் சரிந்தும், 138 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிவடைந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)