பதிவு செய்த நாள்
22 ஜன2016
10:41
மும்பை : கடந்த சில தினங்களாக கடும் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஜன.22ம் தேதி) மீண்டுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 240.48 புள்ளிகள் உயர்ந்து 24,202.69 புள்ளிகளிலும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 68.20 புள்ளிகள் உயர்ந்து 7,345ஆகவும் இருந்தன.
அமெரிக்க, ஐரோப்பியா மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம், முதலீட்டாளர்களில் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியது, குறிப்பாக முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தொடர்ந்து உயர்வுடன் இருந்த பங்குச்சந்தைகள் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு அதிகமாகவும், நிப்டி 100 புள்ளிகளுக்கு அதிகமாகவும் வர்த்தகமாகி கொண்டிருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|