தங்கம் விலை இன்று(ஜன.22) மாலைநிலவரப்படி ரூ.136 சரிவுதங்கம் விலை இன்று(ஜன.22) மாலைநிலவரப்படி ரூ.136 சரிவு ... பி.எப்., வட்டி 9 சதவீதம்? பி.எப்., வட்டி 9 சதவீதம்? ...
பெட்ரோல், டீசல் விலை உயரும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜன
2016
12:47

புதுடில்லி: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை, மேலும் உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் நிறுவனங்களே, 15 நாட்களுக்கு ஒரு முறை நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை, கடந்த, 13 ஆண்டுகளாக இல்லாத அளவில், பேரல் ஒன்றுக்கு, 1,943 ரூபாயாக குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல், டீசல், விலையை, எண்ணெய் நிறுவனங்கள் அதற்கேற்ப குறைக்கவில்லை.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதத்தில் மட்டும், பெட்ரோல், டீசல் உற்பத்தி வரியை, மத்திய அரசு நான்குமுறை உயர்த்தி, விலையை குறைய விடாமல் செய்துள்ளது. வரும், 2016 - 17ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை, மேலும் உயர்த்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான காரணங்களாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:* நடப்பு நிதியாண்டுக்கானநிதிப்பற்றாகுறையை, 3.9 சதவீதமாக குறைக்க அரசு விரும்புகிறது * பொதுத்துறை நிறுவனங்களில், அரசுக்கான பங்குகளை விற்பதன் மூலம், 69 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் திரட்ட, அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது; ஆனால், இதுவரை, 12 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் தான் கிடைத்துள்ளது; மார்ச் 31க்குள் இலக்கை அடைய வாய்ப்பில்லை * நேரடி வரி வசூலிலும், 40 ஆயிரம் கோடி ரூபாய், பற்றாக்குறை ஏற்படும் என தெரிகிறது. இந்த காரணங்களால் தான், பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)