பதிவு செய்த நாள்
27 ஜன2016
18:13
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் துவங்கி, உயர்வுடன் முடிந்தபோதிலும் நிப்டி 7450 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றம் காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கின. சென்செக்ஸ் 100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் இருந்தது. ஆனால் அதன்பின்னர் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்குகள் சரிந்தன. இருப்பினும் சிறு உயர்வுடன் வர்த்தகம் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 6.44 புள்ளிகள் உயர்ந்து 24,492.39-ஆகவும், நிப்டி 1.60 புள்ளிகள் உயர்ந்து 7,434.75-ஆகவும் முடிந்ததோடு, நிப்டி 7450 புள்ளிகளுக்கு கீழ் சென்றது.
இன்றைய வர்த்தகத்தில், 1363 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 1196 நிறுவன பங்குகள் சரிந்தும், 189 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|