மளிகை பொருட்கள் விலை குறையுமா?மளிகை பொருட்கள் விலை குறையுமா? ... உற்பத்தி தற்காலிக நிறுத்தம் உற்பத்தி தற்காலிக நிறுத்தம் ...
இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது: நிர்மலா சீத்தாராமன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2016
15:57

மதுரை:''சீனா உள்ளிட்ட நாடுகளில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தபோதும், இந்தியா 7 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது,'' என, மதுரையில் இந்திய தொழிற் கூட்டமைப்பு, யங் இந்தியன்ஸ் சார்பில் நடந்த கருத்தரங்கில் மத்திய தொழில் வர்த்தக அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் குறிப்பிட்டார்.கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கருமுத்து டி.கண்ணன் வரவேற்றார். சேர்மன் வாசு தலைமை வகித்தார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியதாவது: உலகளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. சீனாவில் கூட பொருளாதார பிரச்னை; பண மதிப்பு குறைந்து விட்டது. இந்நிலையிலும் இந்தியா 7 சதவீத பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளது. இதை உலக வங்கி, பன்னாட்டு நிதி ஆணையம் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலை நீடித்தால் 8 சதவீத வளர்ச்சியை எட்டும். சீனா மூன்று ஆண்டுகளில் அதிக உற்பத்தி செய்து ஓராண்டிற்கு ஏற்றுமதி செய்ய தேவையான பொருட்களை வைத்துள்ளது. இதனால் விலை மலிவாக வழங்க நடவடிக்கை எடுக்கிறது. அதனுடன் இந்திய உற்பத்தியாளர்கள் போட்டியிட வேண்டியிருக்கிறது.
தொழில் வளர்ச்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளான தேசிய நெடுஞ்சாலைகள், தொழில் வழித்தடங்களை மேம்படுத்தும் நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. இதனால் நாட்டில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.பெங்களூரு-மும்பை, மும்பைடில்லி, கோல்கட்டா -விசாகபட்டினம், விசாகபட்டினம்-சென்னை தொழில் வழித்தடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. விசாகபட்டினம்-சென்னை வழித்தடம் துாத்துக்குடி வரை விரிவுப்படுத்தப்படுகிறது.
நாட்டில் 3.6 கோடி சிறுதொழில் நிறுவனங்கள் உள்ளன. எட்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. ஆறாயிரம் பொருட்கள் சிறு தொழில்கள் மூலம் உற்பத்தியாகின்றன. ஏற்றுமதியில் 40 சதவீதம் வரை, சிறு தொழில்கள் பங்கு வகிக்கின்றன. குறைபாடு இல்லாத வகையில் பொருட்களை ஏற்றுமதி செய்யுமளவுக்கு தரம் அதிகரித்துள்ளது. தொழில் முனைவோருக்காக சிட்பி, மேக்இன் இந்தியா மற்றும் முத்ராவங்கி மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது என்றார்.
கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கே.எஸ்.பரத், துணை தலைவர் ரமேஷ் க்யாமல், நிர்வாகி சுந்தர், துணை தலைவர் அன்புக்கனி, டிலோட்டி இந்தியா இயக்குனர் குமார் மற்றும் பலர் பேசினர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)