பதிவு செய்த நாள்
27 பிப்2016
11:56
நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த, ‘வி 15’ என்ற, தன் புதிய இருசக்கர வாகனத்தின் விலை விவரத்தை, பஜாஜ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய கடற்படைக்கு சொந்தமான முதல் விமானந்தாங்கி போர் கப்பல், ஐ.என்.எஸ்., விக்ராந்த். இந்த கப்பலின் ஆயுட் காலம் முடிந்ததால், அதை உடைத்து விற்க, மத்திய அரசு முடிவு செய்தது.
நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ், ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலை வாங்கியது. அதை போற்றும் வகையில், கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட இரும்பை பயன்படுத்தி, ‘வி 15’ என்ற புதிய இருசக்கர வாகனத்தை, பஜாஜ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது, இந்த வாகனத்தை வாங்குவோர் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.
இந்த வாகனம், 149.5 சி.சி., திறனில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் விலை, சென்னையில், 62 ஆயிரத்து, 820 ரூபாய்; மும்பையில், 63 ஆயிரத்து, 682 ரூபாய்; கோல்கட்டாவில், 65 ஆயிரத்து, 492 ரூபாய்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|