பதிவு செய்த நாள்
31 மார்2016
00:51
புதுடில்லி : ரிலையன்ஸ் நிறுவனம், தன் புதிய ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து துவக்கக் கூடும் என, கிரெடிட் சூயிஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் அனேகமாக டிசம்பர் மாதம் இருக்கலாம் என, சில செய்திகள் கசிந்தன. இந்நிலையில் கிரெடிட் சூயிஸ், ‘விரைவிலேயே அறிமுகமாகலாம். அதற்கான ஏற்பாடுகளைக் காண முடிகிறது’ என்று தெரிவித்திருக்கிறது.‘ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களுக்கு சென்றபோது, ஆர்.ஜியோ அறிமுகத்துக்கான வேலைகளில் ஊழியர்கள் இறங்கி இருப்பதைப் பார்க்க முடிந்தது. அவர்கள் சமீபத்தில் பயிற்சி வகுப்புகளுக்கும் சென்று வந்திருக்கின்றனர். தங்களுக்கு சிம் கார்டுகள் வந்து சேர்ந்துவிட்டதாகவும், ஆனால், எப்போது விற்பனை செய்ய வேண்டும் என, அறிவிப்பு வரவில்லை’ எனவும் தெரிவித்தனர் என்று, கிரெடிட் சூயிஸ் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|