பதிவு செய்த நாள்
24 ஏப்2016
03:22
சென்னை:எகோபியா நிறுவனம், சென்னைக்கு அருகில், ‘ரோபோ’க்கள் தயாரிக்க திட்டமிட்டு உள்ளது.சர்வதேச அளவில், எகோபியா நிறுவனம், ‘ரோபோ’க்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம், சென்னைக்கு அருகில், ரோபோக்களை தயாரிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, சான்மினா கார்ப்., என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ‘இ 4’ என்ற ரோபோக்கள், தயாரிக்கப்பட உள்ளன.
இந்த ரோபோ, சூரிய சக்தி மின் நிலையங்களில் உள்ள சூரிய தகடு, மின் வழித்தடம் ஆகியவற்றை, விரைவாக சுத்தம் செய்யும். இதனால் அதிக அளவில் மின் உற்பத்தி செய்ய முடியும்.இதுகுறித்து, எகோபியா அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘உலகில், ரோபோக்கள் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியாவில், சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க இயற்கையாகவே வாய்ப்பு உள்ளதால், இந்திய சந்தை எங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|