பதிவு செய்த நாள்
27 ஏப்2016
00:03
அகமதாபாத் : அமுல் நிறுவனம், போட்டியைச் சமாளிக்கும் வகையில் தனது, ‘சாக்லேட்’ தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தும் கூட்டமைப்பு, ‘அமுல்’ என்ற பெயரில், பால், பால் உப பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு குஜராத், ஆனந்த் மாவட்டத்தில், சாக்லேட் தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இங்கு, ஆண்டுக்கு, 7,600 டன் சாக்லேட் தயாரிக்க முடியும். சாக்லேட் விற்பனையில் நான்காவது இடத்தை பெற்றுள்ளது.இந்நிலையில், காட்பரி நிறுவனம், ஆந்திராவில், ஆண்டுக்கு, 60 ஆயிரம் டன் தயாரிக்கும் திறன் உடைய, சாக்லேட் ஆலை ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அமுல் நிறுவனம், தனது சாக்லேட் ஆலையின் திறனை, 20 ஆயிரம் டன்னாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்க பணிகள், 2016 – 17ம் ஆண்டிற்குள் முடியும் என தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|