பணி­மே­லாண்­மையில் தொழில்­நுட்ப பயன்­பாடு பணி­மே­லாண்­மையில் தொழில்­நுட்ப பயன்­பாடு ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.58 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.66.58 ...
வங்கி சொத்து மதிப்பு சரிவு; இந்தியாவின் கடன் தகுதி குறையும் ‘மூடிஸ்’ நிறுவனம் எச்சரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஏப்
2016
00:13

புது­டில்லி : ‘பொது துறை வங்­கி­களின் சொத்து மதிப்பில் ஏற்­பட்­டுள்ள சரிவு, தொடர்ந்து நீடித்தால், இந்­தி­யாவின் கடன் தகுதி மதிப்­பீடு குறையும்’ என, சர்­வ­தேச தர நிர்­ணய நிறு­வ­ன­மான, மூடிஸ் இன்­வெஸ்டர் சர்வீஸ் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.
அதன் அறிக்கை: இந்­தி­யாவில், பொது துறை வங்­கி­களின் வாரா கடன் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கி­றது. கடந்த, 2015ல், ஒட்­டு­மொத்த வங்­கி­களின் சொத்து மதிப்பில், வாரா கடன், 70 சத­வீ­தத்­திற்கும் மேலாக அதி­க­ரித்­துள்­ளது. தொடர்ந்து ஐந்து ஆண்­டு­களாக, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி அடிப்­ப­டை­யி­லான, கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் கடன், 49.9 சத­வீ­த­மாக உள்­ளது.இவ்­வகை கடன் அதி­க­ரிப்­பதில், ஆபத்தும் உள்­ளது. பொரு­ளா­தார வளர்ச்சி மந்­த­ம்­அடைந்தால், கட­னா­ளிகள், வாங்­கிய கடனை திரும்ப செலுத்த முடி­யாத நிலை ஏற்­படும்; இது, பொது துறை வங்­கி­களின் நிதி­யா­தா­ரத்தில் பாதிப்பை ஏற்­ப­டுத்தி, அவற்றின் சொத்து மதிப்பு குறைய வழி வகுக்கும்.
அத்­த­கைய சூழலில், மத்­திய அரசு, பங்கு மூல­தனம் மூலம் வங்­கி­க­ளுக்கு கைகொ­டுத்து உதவும் என்­றாலும், அது, நிர்­ண­யிக்­கப்­பட்ட பட்ஜெட் இலக்கை விட, அதி­க­மாக வாய்ப்பு உள்­ளது. அதன் கார­ண­மாகவும், மத்­திய அரசின் நிதிச்­சுமை அதி­க­ரிக்­கலாம். தற்­போது, இந்­தி­யாவின் பொரு­ளா­தார வளர்ச்­சியும், கடனும் மித­மான அளவில் உள்­ளன. கார்ப்­பரேட் நிறு­வ­னங்­களின் வாரா கடன் சுமைதான், பொது துறை வங்­கி­களை நிமிர விடாமல் அழுத்தி வரு­கி­றது. நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி, வலு­வாக இருந்தால், வங்­கி­களின் கடன் சுமை வெகு­வாக குறையும்.
மத்­திய அரசின் நட­வ­டிக்­கை­களால், வரும் ஆண்­டு­களில், இந்­திய பொரு­ளா­தாரம் வலுப்­பெற்று, நிதி நிலை சீராகும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அதே­ச­மயம், பொரு­ளா­தார வளர்ச்சி வேக­மெ­டுக்க வில்­லை­யென்றால், இந்­தி­யாவின் கடன் பெருகும். இந்­தியா, தன் சுய­தே­வை­க­ளுக்கு நிதி திரட்­டு­வது கூட சிர­ம­மாக இருக்கும். அப்­போது, அதன் கடன் தகுதி மதிப்­பீடும் குறையும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
பொது துறை வங்­கி­களின் வாராக் கடன்: கடந்த, 2015, டிசம்பர் வரை, ரூ.3.70 லட்சம் கோடி. வாராக் கட­னுக்­காக, நிதி ஒதுக்­கு­வதால், வங்­கிகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. மத்­திய அரசு, பொது துறை வங்­கி­க­ளுக்கு, பங்கு மூல­த­ன­மாக, 2015 – 19ம் நிதி­யாண்­டுகள் வரை, ரூ.70,000 கோடி வழங்க துவங்­கி­யுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)