பதிவு செய்த நாள்
30 ஏப்2016
06:27
புதுடில்லி : ஆந்திராவில், ‘இசுசூ’ மோட்டார் நிறுவனம், வாகன தொழிற்சாலையை அமைத்துள்ளது. ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசுசூ மோட்டார் இந்தியா நிறுவனம், வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், ஆந்திர மாநிலத்தில், கார் தொழிற்சாலை அமைக்க, 2012 ஆக., மாதம், அம்மாநில அரசுடன், புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.இதையடுத்து, இந் நிறுவனத்திற்கு, சித்துார் மாவட்டத்தில், 107 ஏக்கர் நிலத்தை, ஆந்திர அரசு ஒதுக்கீடு செய்தது. அங்கு, 3,000 கோடி ரூபாய் திட்ட செலவில், ஆண்டுக்கு, 50 ஆயிரம் வாகனங்கள் தயாரிக்கும் திறன் உடைய ஆலை அமைக்க, இசுசூமுடிவு செய்தது. இதன் மூலம், 2,000 – 3,000 பேருக்கு வேலை கிடைக்கும் என தெரிகிறது. இந்த ஆலையில், எல்.சி.வி., மற்றும்யு.வி., மாடல் வாகனங்களை தயாரிக்க, இசுசூ நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|