பதிவு செய்த நாள்
08 மே2016
06:32
பெங்களூரு:பிபிஎல் நிறுவனம், வீட்டுக்கு தேவையான தானியங்கி சாதனங்கள், கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றுக்கான பிரிவில், 10 சதவீத சந்தையை பிடிக்க முயற்சி எடுத்துள்ளது.பிபிஎல் நிறுவனம், ‘பிபிஎல் ஐக்யூ’ என்ற பிராண்டில், கண்காணிப்பு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த பிரிவில், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில், 10 சதவீத சந்தையை பிடிக்கவும் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜயகுமார் கூறியதாவது:வீடுகளுக்கான தானியங்கி சாதனங்கள், கண்காணிப்பு சாதனங்கள் ஆகியவற்றுக்கான சந்தை, 3,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கிறது. அரசு, 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க இருப்பதும், எங்களுக்கு அதிக சந்தை வாய்ப்புகளை வழங்கும் என, எதிர்பார்க்கிறோம். இப்பிரிவில், 10 சதவீத சந்தையை, இரண்டு மூன்று ஆண்டுகளில் பிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|