பதிவு செய்த நாள்
10 மே2016
13:06
தேர்தல் கெடுபிடிகளால், அட்சய திருதியைக்கு, 1,500 கிலோ தங்கம் மட்டும் விற்பனையானது. தமிழகத்தில் உள்ள நகைக் கடைகளில், தினமும் சராசரியாக, 1,000 கிலோ தங்க ஆபரணங்கள் விற்பனையாகின்றன. அட்சய திருதியைக்கு, தங்கம் வாங்கினால், 'செல்வம் பெருகும்' என்ற ஐதீகம் காரணமாக, அன்றைய தினம், பலரும், தங்கம் வாங்க ஆர்வம் காட்டுவது வழக்கம்.
நடவடிக்கை : அதன்படி, 2014ம் ஆண்டு அட்சய திருதியை நாளன்று, 1,500 கிலோ; 2015ல், 2,100 கிலோ தங்க நகைகள் விற்பனையாகின. தற்போது, சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்க, தேர்தல் ஆணையம், பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், பணப்புழக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், அட்சய திருதியை நாளான நேற்று, தமிழகத்தில், 1,500 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது; இதன் மதிப்பு, 450 கோடி ரூபாய்.
முன்பதிவு : இது குறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறியதாவது:அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க, ஏராளமானோர் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்கள், நேற்று கடைகளுக்கு வந்து நகைகளை வாங்கிச் சென்றனர். தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி, பலரும் நகை வாங்க வந்தனர். இருப்பினும், கடந்த ஆண்டு அட்சய திருதியைக்கு விற்பனையான தங்கத்தை விட, நடப்பாண்டில் விற்பனை சற்று குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|