பதிவு செய்த நாள்
12 மே2016
00:35
புதுடில்லி:டில்லியைச் சேர்ந்த பெண் ஒருவர், வீட்டில் இருந்தபடியே, ஆர்கானிக் சோப்பு தயாரித்து, இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகிறார்.
ருச்சி கன்வார் என்பவர் வீட்டில் இருந்தபடியே, சரும பாதிப்புகளை குணமாக்க கூடிய, ஆர்கானிக் சோப்புகளை தயாரித்து, விற்பனை செய்கிறார். இந்த சோப்பை, நொய்டாவில் நடந்த கைவினை கண்காட்சியில் அறிமுகம் செய்தார். இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த, கிராப்ட்லி நிறுவனம், கன்வார் போன்ற தனிநபர்கள், பொழுதுபோக்குக்காக பொருட்களை தயாரிப்பவர்கள் போன்றோருக்கு, ‘ஆன்லைன்’ சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.
இதுகுறித்து, கன்வார் கூறுகையில், ‘‘வீட்டில் இருந்த ஓய்வு நேரத்தில், சோப்பு தயாரிக்கும் முறையை கற்று கொண்டு, 1,000 ரூபாய் முதலீட்டில், சோப்பு தயாரிக்கும் பணியை துவக்கினேன். இதை, நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதால், நல்ல லாபம் கிடைக்கிறது,’’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|