பதிவு செய்த நாள்
12 மே2016
16:14
மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் இன்று நாள் முழுவதும் ஏற்றத்துடன் காணப்பட்டன. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 193.20 புள்ளிகள் உயர்ந்து 25,790.22 புள்ளிகளாகவும், நிப்டி 51.55 புள்ளிகள் அதிகரித்து 7900.40 புள்ளிகளாகவும் இருந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிப்டி நீண்ட நாட்களுக்கு பிறகு 7900 புள்ளிகளை கடந்துள்ளது முதலீட்டாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி, ஆசியன் பெயின்ட்ஸ், எஸ்பிஐ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், ஆக்சிஸ் வங்கி, ஹயூஎல், மாருதி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்பட்டன. பொதுத்துறை வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும், இந்த வட்டிவிகித குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும் என அறிவித்துள்ளதாலும் வங்கித்துறையில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாகவே இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|