சுந்­தரம் பாஸ்ட்னர்ஸ்லாபம் ரூ.372 கோடிசுந்­தரம் பாஸ்ட்னர்ஸ்லாபம் ரூ.372 கோடி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.25 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.25 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பி.எப்., கணக்கு ஒருங்கிணைப்பு இனி மிகவும் எளிது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2016
08:04

ஊழி­யர்கள் பணி­மாறும் போது, பழைய பி.எப்., கணக்­கு­களை எளி­தாக்கும் புதிய வசதி அறி­மு­க­மா­கி­யுள்­ளது. பல ஊழி­யர்கள் வேறு நிறு­வ­னத்­திற்கு மாறும் போது, தங்கள் பழைய பி.எப்., கணக்கில் இருந்து பணத்தை எடுத்­துக்­கொண்டு விடு­கின்­றனர்.பலர் பழைய கணக்கை தொட­ராமல் அப்­ப­டியே விட்­டு­வி­டு­கின்­றனர். பி.எப்., என்­பது ஊழி­யர்­களின் நீண்ட கால பாது­காப்­பிற்­கா­னது என்­பதால், அவர்கள் பணி­ மாறும் போது, பழைய கணக்­கு­களை எளி­தாக ஒருங்­கி­ணைக்கும் புதிய வசதி அறி­முகம் செய்­யப்­பட்­டுள்­ளது.
புதிய வசதிஒரு ஊழியர், ஒரு பி.எப்., கணக்கு எனும் பெயரில் அறி­முகம் செய்­யப்­பட்­டுள்ள இந்த வசதி மூலம், உறுப்­பி­னர்கள் தங்­களின் தற்­போ­தைய பி.எப்., கணக்­கிற்கு, பழைய பி.எப்., கணக்­கு­களில் உள்ள தொகை­களை மாற்­றிக்­கொள்­ளலாம். இந்த வச­தியை பயன்­ப­டுத்­திக்­கொள்ள, உறுப்­பி­னர்கள், தங்­க­ளுக்­கான ஒருங்­கி­ணைந்த நிரந்­தர அடை­யாள எண்ணை (யு.ஏ.என்.,) பெற்­றி­ருக்க வேண்டும். இந்த எண்­ணுடன் மொபைல் போன் எண்ணும் இணைக்­கப்­பட்­டி­ருக்க வேண்டும். அடுத்த கட்­ட­மாக, பி.எப்., இணை­ய­த­ளத்­திற்கு சென்று, சேவைகள் பிரிவில் ஊழி­யர்கள் எனும் பகு­தியை தேர்வு செய்தால், அதில் ஒரு ஊழியர் ஒரு பி.எப்., கணக்கு வச­திக்­கான பகு­தியை பார்க்­கலாம். அந்த பகு­தியில் நிரந்­தர எண், மொபைல்போன் எண் மற்றும் பி.எப்., எண்ணை சமர்ப்­பிக்க வேண்டும். அதன் பின் மொபைல்­போ­னுக்கு ஒரு முறை பாஸ்வேர்ட் அனுப்பி வைக்­கப்­படும். அதைக்­கொண்டு அடுத்த பக்­கத்­திற்கு சென்று, மாற்ற வேண்­டிய பழைய பி.எப்., கணக்கு எண்­களை சமர்­பிக்க வேண்டும். தற்­போது பத்து பி.எப்., கணக்­குகள் வரை சமர்ப்­பிக்கும் வசதி இருக்­கி­றது.
பழைய கணக்குஇதன் பின், பி.எப்., கணக்கு எண்கள் சம்­பந்­தப்­பட்ட பி.எப்., அலு­வ­ல­கங்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும். நிரந்­தர எண், ஆதார் அடை­யாள அட்­டை­யுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்தால் விவ­ரங்கள் எளி­தாக சரி­பார்க்­கப்­பட்டு, பழைய கணக்­கு­களில் உள்ள தொகை தற்­போ­தைய கணக்­கிற்கு மாற்­றப்­படும். ஆதார் அடை­யாள அட்­டை­யுடன் இணைக்­கப்­படா விட்டால் பி.எப்., அலு­வ­லகம், ஊழி­யரின் அடை­யா­ளத்தை உறுதி செய்யும் விவ­ரங்­களை கேட்டு பெற்­றபின், பழைய கணக்­கு­களின் தொகை மாற்றம் செய்­யப்­பட வழி செய்யும். இதில் ஏதேனும் பிரச்னை எழுந்­தாலும் பிராந்­திய அலு­வ­லகம், ஊழி­யர்­க­ளுக்கு தேவை­யான உத­வி­களை செய்து வழி­காட்டும்.
ஆதார் எண்மேலும் நிரந்­தர எண்­ணுடன் இணைக்­கப்­பட்ட கணக்கு எனில் மாற்றம் தானாக நிகழும் வசதி உள்­ளது. அதா­வது அடுத்த முறை ஊழியர் பணி­மாறும் போது, நிரந்­தர எண்ணை புதிய நிறு­வ­னத்தில் சமர்­பித்­தாலே போது­மா­னது. அதன் பின் துவக்­கப்­படும் புதிய பி.எப்., கணக்கில் பழைய கணக்கில் உள்ள பணம் மாற்­றப்­படும். இந்த சேவை பற்­றிய விவ­ரங்­க­ளுக்கு: http://oeoea.epfoservices.com/UANDEDUP

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)