பதிவு செய்த நாள்
27 மே2016
07:04
மும்பை : அரவிந்த் நிறுவனம், இணையதளம் மூலமான வணிகத்திலும் தற்போது இறங்கியுள்ளது. ஜவுளி விற்பனையில் முன்னணியில் உள்ளது அரவிந்த் நிறுவனம். இந்த நிறுவனம், தற்போது இணையதளம் மூலமான வணிகத்திலும் களம் இறங்கி உள்ளது. இதன் மூலம், அரவிந்த் நிறுவனத்தின் ஆடைகளை, அவர்களின் இணையதளம் மூலமாக ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.ஆர்டர் செய்த, 46 மணி நேரத்திற்குள், ஆடைகளை, ‘டெலிவரி’ செய்ய, அரவிந்த் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. மேலும், உடனே திரும்பப் பெறும் வசதியையும் அளிக்கிறது. இதுகுறித்து, அரவிந்த் நிறுவன நிர்வாக இயக்குனர் குலின் லால்பாய் கூறியதாவது:எங்கள் அரவிந்த் நிறுவனத்தின் ஆடைகளை மட்டுமின்றி, ‘கேப், கால்வின் கெலின், நாட்டிகா, யு.எஸ்.போலோ, ஏரோபோஸ்டல்’ என, பிற பிராண்டுஆடைகளையும் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்ள வாய்ப்பு தருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|