பதிவு செய்த நாள்
27 மே2016
15:40
எலக்ட்ரானிக் உபகரனங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழும் சிஸ்கா, மொபைல் போன் மற்றும் கம்ப்யூட்டர்களுக்காக புதிய பவர்பேங்க்கை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 10050 மெகா ஹெட்ஸ் திறன் கொண்ட இந்த பவர்பேங்கிற்கு பவர் எலைட் 100 (க்யூசி) என பெயரிடப்பட்டுள்ளது. அனைவரையும் கவரும் வடிவம் மற்றும் டிசைனில் இந்த பவர்பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக அதிவிரைவில் சார்ஜ் ஏறும் திறன் உடையதாக இந்த பவர்பேங்க் அமைக்கப்பட்டுள்ளது. பாடல் கேட்பது, சேட்டிங், படங்கள், இமெயில்கள் அனுப்புவது உள்ளிட்டவைகள் இதன் தனித்திறன்களாகும்.
இந்த பவர்பேங்க்கை பயன்படுத்தி ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள், டேப்லட்கள் உள்ளிட்ட 2 கருவிகளுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். ஒரே நேரத்தில் இரண்டு எலக்ட்ரானிக் டிவைஸ்களையும் இணையும் வகையில் இரண்டு யூஎஸ்பி.,க்கள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. பயணத்தின் போது இந்த பவர்பேங்க்கை கொண்டு எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடியும். பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து இந்த பவர்பேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த மின்னழுத்தம், கூடுதல் மின் அழுத்தம், வெப்பநிலை கட்டுப்பாடு உள்ளிட்டவைகளை தாங்கும் வகையில் இந்த பவர்பேங்க் அமைக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து நீண்டநேரம் பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது.
எல்இடி டார்ச் லைட்டாகவும் இந்த பவர்பேங்க்கை பயன்படுத்திக் கொள்ளாம்.வெள்ளை, கறுப்பு, கோல்ட் மற்றும் ஊதா என 4 நிறங்களில் இந்த பவர்பேங்க் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.3299 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|